In Alanganallur, the opposition joined the BJP

பாரதிய ஜனதா கட்சி புதிய நிர்வாகிகள்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சமுதாய கூடத்தில் பாரதிய ஜனதா கட்சி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இதற்கு ஒன்றிய தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தங்கினார். மண்டல பார்வையாளர் செந்தில் குமார், மாவட்ட துணை தலைவர் கோவிந்தமூர்த்தி, மாவட்ட பொது செயலாளர் சந்தோஷ் சுப்ரமணியன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ரமேசன், மாவட்ட பொருளாளர் ஹரிகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசினார். 

பாரதிய ஜனதா கட்சி புதிய நிர்வாகிகள்

அப்போது மாற்றுகட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் பாரதிய ஜனதாவின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் வளர்ந்து கொண்டே போகிறது. மேலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமைக்கும் கூட்டணி அசைக்க முடியாத சக்தியாக திகழும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் சீதாராமன், மண்டல் பொது செயலாளர் இருளப்பன், வசந்த், முகுந்தன், நகர் தலைவர் வேலுமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்