முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக குமாரம், மற்றும் கள்ளிவேலிபட்டி கிராமத்தில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், பரந்தாமன் ஆகியோர் தலைமை தாங்கினர். செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், அவை தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் விஜயலட்சுமி முத்தையன், பேரூர் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

குமாரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏ வெங்கடேசன் பேசியபோது எடுத்த படம்...

ஒன்றிய கவுன்சிலர் சரவணன், ஜெகதீஸ்வரி ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில். பாஜக தலைவர் அண்ணாமலை கூறும் ஊழல் பட்டியலில் எந்தவித உண்மையும் இல்லை. கர்நாடக மாநிலத்தில் ஆளும் பிஜேபி அரசு தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவர முடியவில்லை அதைப்பற்றி பேச அண்ணாமலைக்கு வழியில்லை.

கள்ளிவேலிபட்டி ஊராட்சியில் நடந்த திமுக ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏ வெங்கடேசன் பேசியபோது எடுத்த படம்..

 மீடியாக்களை வரவழைத்து பேட்டி கொடுக்கும் வெற்று விளம்பரத்தை மக்கள் நம்பமாட்டார்கள். மத்திய அரசின் பல்வேறு தொழில் துறைகளை தனியாருக்கு விற்றது தான் மத்திய அரசின் சாதனையா என மத்தியில் ஆளும் பிஜேபி அரசை குற்றம் சாட்டி பேசினார். மேலும் கல்வி ஒன்றே நாட்டின் சிறந்த பொருளாதாரம். தொகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளில் சமையல் கூடங்களுக்கு தண்ணீர் வசதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். மீதமுள்ள நான்கு ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ஒன்றிய சேர்மன் பஞ்சு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், கிளை செயலாளர் அருண், இளைஞரணி சந்தன கருப்பு, மருது, மாணவரணி பிரதாப், யோகேஷ், தகவல் தொழில் நுட்ப அணி தவசதீஷ், பொறியாளர் அணி ராகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்