அலங்காநல்லூர் அருகே கேரளா நம்பர் லாட்டரி விற்ற வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து ரொக்க பணம் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அலங்காநல்லூர் ஆய்வாளர் சங்கர் கண்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது  அனுமதியின்றி கேரளா நம்பர் லாட்டரி விற்ற மேலச்சின்னம்பட்டியை சேர்ந்த செல்லத்துரை (63), கொண்டையம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் (48) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களைடமிருந்து ரொக்கபணம் ரூ. 2ஆயிரத்து 210 மற்றும் 48 நம்பர் லாட்டரி கொண்ட பேப்பர், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்