இந்திய தேசத்தின் 75வது சுதந்திர தின பவள விழாவினை முன்னிட்டு மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் அலங்காநல்லூர் வட்டார காங்கிரஸ், நகர் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 


இந்த நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் சுப்பாராயலு தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட தலைவர் ஆலாத்தூர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மனித உரிமை மாவட்ட தலைவர் ஜெயமணி, நகர் தலைவர் சசிகுமார், புதுப்பட்டி ராமமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


பிசி பிரிவு மாவட்ட தலைவர் முருகன், ஓ.பி.சி பிரிவு வட்டாரத் தலைவர் பாண்டியராஜன், முத்து, முன்னாள் வட்டார தலைவர் மலைக்கணி, திரவியம், மீனாட்சி, முத்தன், தமிழரசன், வேலாயுதம், தர்மர், அசோகன், மற்றும் பலர் பங்கேற்று நகர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வலங்கினர். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா வழங்கப்பட்டது.

புதியது பழையவை

தொடர்பு படிவம்