அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை அலங்காநல்லூர்
மதுரை தெற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை 218வது நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஏ.எம்.எம் கவுண்டர் பள்ளியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் ஒன்றிய தலைவர் விஜி, ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய பொருளாளர் ரேவதி ராஜ்குமார், மதுரை, தேனி மாவட்ட அமைப்பு செயலாளர் முருகானந்தம் அவர்கள் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் அழகர்சாமி, மாவட்ட துணை தலைவர் கே.என்.ராஜா, மேற்கு ஒன்றிய செயலாளர் வேளாங்கண்ணி, ஸ்டாலின், மதுரை தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வம் ஸ்டாலின், மாவட்ட அமைப்பு செயலாளர் தேவேந்திர குமார், மாவட்ட அமைப்பு துணைச் செயலாளர் வேந்தன், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜேஷ், வாடிப்பட்டி ஒன்றிய தலைவர் சுரேஷ், உசிலம்பட்டி ஜெயமங்கலம், ஜெயபாண்டி,
முடுவார்பட்டி கிளைத் தலைவர் நாராயணன், ராஜ்குமார், பரணி, கிளைச் செயலாளர் முருகன், அமரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
புதியது பழையவை

தொடர்பு படிவம்