அலங்காநல்லூரில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
அலங்காநல்லூர், ஆக.4- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 218வது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், யூனியன் துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் வாவிடமருதூர் கார்த்திகேயன், நகர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன், ரகுபதி,ஒன்றிய துணைச் செயலாளர் அருண்குமார், இளைஞரணி அமைப்பாளர்கள் சந்தனகருப்பு, மருது, மாணவரணி அமைப்பாளர்கள் பிரதாப், யோகேஷ், பொறியாளர் அணி அமைப்பாளர் ராகுல், தகவல் தொழில் நுட்ப அணி தவசதிஸ், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை

தொடர்பு படிவம்